வவுனியாவில் சிவில் பா துகாப்பு குழு உறுப்பினர்களுக்க பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கல்!!

332


சான்றிதழ்கள் வழங்கல்..



சிவில் பா துகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா, பாண்டாரிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.



வவுனியா, பண்டாரிகுளம் மற்றும் உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரினால் உருவாக்கப்பட்ட சிவில் பா துகாப்புக் குழுக்களில் இணைந்து கடந்த ஆண்டு பணியாற்றியவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.




இதன்போது பண்டாரிகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் 09 தமிழ் பொலிஸ் உத்தியோகர்தர்களுக்கும் சிவில் பா துகாப்புக் குழுவினரால் கௌரவித்து பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


இதில் வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகரி அன்வர், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், பொலிசார், சிவில் பா துகாப்பு குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.