ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன், பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி அடிக்கடி அரச நிறுவனக்களிற்குள் திடீர் விஜயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.