வவுனியா பாவற்குளம் கலைமகள் வித்தியாலய கால்கோள் விழா மற்றும் பொங்கல் விழா!!

323

கால்கோள் விழா

வவுனியா பாவற்குளம் கலைமகள் வித்தியாலய கால்கோள் விழா நேற்று முன்தினம் (16.01.2020) பாடசாலை அதிபர் சி.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் செ.விஜயகாந்தன்,

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வாரிக்குட்டியூர் கிராம சேவையாளர் ப.கோகுல்ராஜ், பாவற்குளம் பொது சுகாதார பரிசோதகர் R.சுகந்தராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.பிரேமஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தரம் ஒன்றிற்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மாணவர்களால் வரவேற்பும் வழங்கப்பட்டது.