வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்!!

390


அமைச்சர் விமல் வீரவன்ச



வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலை 3.00 மணிக்கு விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வவுனியா பூந்தோட்டம் கைத்தொழில் பேட்டைக்கு வருகைதந்திருந்த கைத்தொழில் அமைச்சர், கைத்தொழில் முனைவோரின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.



கைத்தொழில் பேட்டை வளாகத்தில் ஒன்றுகூடிய கைத்தொழில் முனைவோரின் பிரச்சனைகளை விளக்கமாக கேட்டறிந்த அமைச்சர் விமல் வீரவன்ச அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினார்.




அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த அரசு தமிழ் தேசிய தலைவர் சம்பந்தன் போன்றோருக்கு வாழ்நாள் பூராவும் தங்கியிருக்க வீடுகளை வழங்கியுள்ளதாகவும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முனையவில்லை என குற்றஞ்சாட்டியதுடன் கோட்டாபே ராஜபக்ச அரசானது அரச தலைவர்களுக்கு ஒரு பொதும் லஞ்சம் வழங்காது மக்களின் பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்
2 Attachments