வவுனியா புகையிரத நிலைய வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

382


விபத்து



வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (19.01.2020) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வைரவப்புளியங்குளம் வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கில் மற்றைய மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.




இவ் விபத்தில் பிலசர் ரக மோட்டார் சைக்கில் பயணித்த இரு பெண்களும் ஒர் சிறுவனும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.