வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப் பணி!!

247

சிரமதானப் பணி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப் பணி இன்று (19.01.202020) காலை முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு அற்ற பிரதேசமாக எமது பகுதியினை வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்திருந்தனர்.

வைத்தியசாலை வளாகம், வாகனத் தரிப்பிடம் , விடுதிகள் போன்றவற்றை சுகாதார பொது பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள்,

துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் வவுனியா பொலிஸார், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் இணைந்து இச் சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்.