வவுனியா பம்பைமடு குப்பைமேடு விவகாரம் : மீண்டும் போ ராட்டம் ஆரம்பம்!!

298

பம்பைமடு குப்பைமேடு விவகாரம்

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குட்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு கொண்டு வந்து பா துகாப்பற்ற முறையில் வீசுவதுடன்,

தீ மூட்டுவதால் வெளியாகும் கரும் புகையினால், பல்வேறு சுவாசப் பி ரச்சினைகள் மற்றும் மழைக் காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கு ற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆ ர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது.

தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆ ர்பாட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. போ ராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.