மட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் : தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை!!

455

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் யு த்தத்திற்கு பின் தமிழ் இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதனை இலங்கை பு லனாய்வு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2013ஆம் ஆண்டு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் விமான தயாரிப்பு பொறியியல் கற்கை நெறியை மேற்கொண்டு மோட்டார் ரக என்ஜினை பயன்படுத்தி சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்க முனைந்தபோது அதனை இரா ணுவத்தினர் சு ற்றி வ ளைத்து பி டித்து த டுத்து நி றுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் குறித்த விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் ப ல த டவை வி சாரணைக்கு உட்படுத்தப்பட்டு உ யிர் அ ச்சு றுத்தல் காரணமாக நா ட்டை வி ட்டு வெ ளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு பின்னர் இலங்கையின் சிறிய ரக விமானத்தை தயாரித்த பெருமை செங்கலடி தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர் அமெரிக்காவில் த ஞ்சம் அ டைந்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது பு லனாய்வுத் து றையினர் சில இளைஞர்களை தே டிவருவதாக தவகல்கள் வெளியாகியுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-