வவுனியாவில் இருந்து தடைகளை தகர்த்து உலகளவில் சாதனை படைக்க செல்லும் மாணவன்!!

531

நாகராஜா தியாகராஜா

வெற்றி என்பது ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். வெற்றிக்கு வறுமை தடை அல்லயென பல்வேறு தடைகளை தாண்டி வவுனியா மாணவன் உலகளவில் சாதனை படைக்க செல்லவுள்ளார்.

அந்த வகையில் விபுலானந்தா கல்லூரி மாணவன் நாகராஜா தியாகராஜா உலகளவில் குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைப்பதற்காக இன்று பாகிஸ்தான் செல்கின்றார்.

மிகச் சிறந்த வாழ்க்கை முறையே உண்மையான வெற்றிக்கு அடையாளம். அது அவனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும். ஒருவர் தான் தீர்மானமாக நினைக்கும் ஒரு விடயத்தை எண்ணியது போல முடித்து விட்டாலே அது வெற்றி தான்.

இந்த நிலையில் வெற்றியில் அளவுகோல் என்று எதுவும் இல்லையென்பதை அம்மாணவன் வறுமையின் மத்தியில் போ ராடி தகர்த்து எறிந்து வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் மென்மேலும் வளர பலரும் பாராட்டி வருகின்றனர்.

வவுனியாவில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு கௌரவிப்பு!!

வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21.01.2020) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை (22.01) பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் எதிர்வரும் 23.01.2020 தொடக்கம் 27.01.2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசீகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.ஸ்ரீதர்சன் மற்றும் கெ.நிரோஜன் ஆகிய வீரர்களை வெற்றிபெற வாழ்த்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியா நகரசபை உபதலைவர் கெ.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார், வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் ஜெகன்,

வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.