உழவு இயந்திரம் மோதியதில் விவசாயி ஒருவர் ப லி!!

283

விவசாயி..

மட்டக்களப்பு- கிரான் – கோராவெளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரத்தின் சாரதி தலைமறைவாகியிருந்த நிலையில், அப்பிரதேச மக்கள் ஒன்று கூடி ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ப தற்றம் நிலவியது. இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துவிச்சக்கர வண்டியில் வயலுக்குச் சென்று கொண்டிருந்த நபரை, மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதால் குறித்த விவசாயி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் – விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் யோகநாதன் என்பவரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ச டலம் உடல் கூறு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.