கவர்ச்சி மொடலாக உலாவந்த பெண் பொலிசாருக்கு நேர்ந்த சோகம்!!

358

பொலிசாருக்கு நேர்ந்த..

உள்ளாடை மொடலாக கவர்ச்சியாக உலாவந்தாலும், கடமை தவறாமல் பணியாற்றிய ஒரு பெண் பொலிசார் பணியின்போது சு ட்டுக் கொ ல்லப்பட்டுள்ளார். பாடி பில்டராகவும், உள்ளாடைகளுக்கு மொடலாகவும் பணியாற்றிவந்தவர் பெண் பொலிசாரான Tiffany-Victoria Enriquez.

ஹவாய் தீவில், ஒரு வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் குடியிருப்பவருக்கும் நடந்த ச ண்டை குறித்து விசாரிப்பதற்காக, அங்கு தனது சக பொலிசாரான Kaulike Kalamaவுடன் சென்றுள்ளார் அவர். அந்த வீட்டில் குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரைக் க த்தியால் கு த்த, அவர், 911ஐ அழைத்திருந்தார்.

அந்த வீட்டுக்கு பொலிசார் இருவரும் செல்ல, கோபத்திலிருந்த அந்த வீட்டில் வசிப்பவர், பொலிசார் இருவரையும் து ப்பாக்கியால் சு ட்டுள்ளார். அதில் பொலிசார் இருவருமே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

அவர்களை து ப்பாக் கியால் சு ட்ட Jaroslav Hanel (69) என்பவர், தான் இருந்த வீட்டுக்கு தீ வை க்க, தீ அருகிலிருந்த ஆறு வீடுகளுக்கு பரவியுள்ளது. தீ வைத்த Hanel, மற்றும் தீப்பற்றிய பக்கத்து வீடுகளிலிருந்த இரு பெண்களைக் கா ணவில்லை.

அவர்கள் என்ன ஆனார்கள்? உ யிரிழந்தார்களா? என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.