வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

502

சிவப்பு எச்சரிக்கை

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காணியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இங்கு டெங்கு பரவும் அ பாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் அகற்றி நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதினை மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறும் இவ் அறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு நோயால் ம ரணமடைந்துள்ளதுடன் 792 பேர் நோய் தா க்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.