ரிசாட் பதியுதீனுக்கு எதிராக..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரின் கூற்று மடத்தனமானது என பாராளுமன்றில் ரிசாட் பதியுதீன் தெரிவித்தமைக்கு எ திர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போ ராட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த போ ராட்டம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வளாகத்தில் பிரதேச சபை உறுப்பினர்களினால் இன்று (24.01.2020) காலை 10 மணியளவில் முன்னேடுக்கப்பட்டது.

பம்பைமடு குப்பை மேடு விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் குப்பை மேட்டிற்கு அருகேயுள்ள மக்கள் தற்போது குடியேறியவர்கள் குப்பைமேடு பல வருடங்களாக இங்கு உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், தவிசாளர் தற்போது குடியேறிய மக்கள் என தெரிவித்தமையினையை ஒரு மடமைத்தனமாக விடயமென கூறியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தவிசாளரின் கூற்றினை மடமைத்தனமானது என தெரிவித்தமையினை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தே கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றம் செய்தது யார், மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தெரியாதா குடியேற்றத்தை குப்பை மேட்டிற்கு அருகில் செய்யக்கூடாது என்று, குப்பைகளை எங்கே போடுவது, எமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு கண்டனம் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பிரதேச சபை உறுப்பினர்கள் 30 நிமிடங்கள் பிரதேச சபை வளாகத்தில் போ ராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.





