வவுனியாவில் முதியவரின் சடலம் மீட்பு!!

322

முதியவரின் சடலம்..

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இன்று (24.01.2020) காலை தூ க்கில் தொ ங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.

குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் இரவு 9 மணியளவில் ஒன்றாக இருந்து உணவருந்தியதாகவும் அதிகாலை 5 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக காணப்பட்டதாகவும்,

அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.

முதியவர் தூ க்கிய தொ ங்கிய நிலையில் ச டலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில் டோச் லைட் உள்ளதுடன் தூ க்கில் தொ ங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும்
மு தியவரின் ம ரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில்,

தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.