வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் போராட்டம் நீதிமன்ற உத்தரவை அடுத்து கைவிடப்பட்டது!!

440

சாளம்பைக்குளம் மக்களின் போ ராட்டம்..

வவுனியா சாளம்பைக்குளத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தை அகற்றுமாறு கோரி நடத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போ ராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து கைவிடப்பட்டது.

வவுனியா நகரசபையின் குப்பை கொட்டும் மடுவம் சாளம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை மடுவத்திற்கு செல்லும் வீதியை வழி மறித்து கொட்டகை அமைத்து கடந்த மூன்று நாட்களாக போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இவ்விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதன் நிமித்தமாக எதிர்வரும் 31.01.2020 வரை போ ராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன், தொடர்ந்து அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை கவனயீர்ப்பு போ ராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் குறித்த குப்பை மடுவத்தை அகற்ற தவறினால் தொடர் போ ராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.