கிளிநொச்சியில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு!!

559

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான பல்கலை கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நோர்வேயிலுள்ள பல்கலைகழகத்திற்கும் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கும் இவ் ஆய்வை மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைகழகமும் நோர்வே பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலின் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான கைகோர்ப்பாக இன்றைய திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உதவிகளை வழங்குகின்றது.

இந்த புதிய மிதக்கும் சூரிய மின் ஆலைரூபவ் நோர்வே கொண்டுள்ள வெளிக்கள மற்றும் கடல்சார் தொழிற்துறைகளின் அனுபவங்களின் பிரகாரம் அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன்.

இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள முதலாவது புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்கல் பங்காக அமைந்துள்ளதுடன் இதனூடாக 42 கிலோ வாற்று மின்சாரத்தை பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும்.

மிதக்கும் மின் ஆலை போன்ற தூய வலு மூலங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பெற்றுக் கொள்வது மக்களின் வாழ்க்கையில் பெருமளவு தா க்கத்தை ஏற்படுத்தும்.

நிலக்கரியில் இயங்கும் மின் பிறப்பாக்கல் ஆலைகள் உள்நாட்டு வளியின் தரத்தில் பாரதூரமான தா க்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காபன் வெளியீடும் காலநிலை மாற்றத்தில் தா க்கம் செலுத்துகின்றன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இளவயது ம ரணங்களை ஏற்படுத்தும் காரணிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளிலிருந்து வெளிவரும் மாசுகளும் பங்களிப்பு செலுத்துகின்றன.

இந்த விடயங்களின் பிரகாரம் படிம எரிப்பொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறுவதற்கு சூரிய சக்தி முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் போன்றே உலகின் அரைப்பங்கு சனத்தொகையினர் கரையோர பகுதிகளில் வசிக்கின்றனர்.

எனவே மிதக்கும் சூரிய மின் ஆலைகளினால் தூய வலுவை பிறப்பித்துரூபவ் நுகரக்கூடியதாக இருக்கும்.

வலுபிறப்பாக்கலுக்கு புதிய வாய்ப்புகள் பலதை உருவாக்கக்கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் ரூபவ் குளங்கள் மற்றும் திறந்த சமுத்திரங்களில் மிதக்கும் சூரிய வலுப் பண்ணைகளை நிறுவக்கூடிய சாத்தியம் ஏற்படும்.

இவற்றை பயன்படுத்தி நாம் சரியாக செயலாற்றினால் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ரூபவ் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இலங்கையை பொறுத்தமட்டில் நீண்ட கால வறட்சி அல்லது தொடர் மழைவீழ்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்காது. இந்த மிதக்கும் சூரிய மின் ஆலை ரூபவ் இலங்கையில் நிறுவப்படவுள்ள பல நிலைபேறான மின் ஆலைகளில் முதலாவதாக அமைந்துள்ளது என கருதுகின்றேன்.

இறுதியாக நோர்வே மற்றும் இலங்கை தரப்பிலிருந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறுவுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த ஒன்றிணைவினூடாக நீண்ட காலமாக பேணப்படும் இலங்கை மற்றும் நோர்வே இடையிலான உறவுக்கு மேலும் பிரகாசத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.