கொரோனா வைரஸ் தன்னால் மற்றவர்களுக்கு பரவி விடகூடாது என்பதற்காக இளம் பெண் செவிலியர் எடுத்த அதிரடி முடிவு!!

648

கொரோனா வைரஸ்

சீனா உட்பட பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய்த்தோற்று, தன்னால் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்க சீனாவைச் சேர்ந்த செவிலியர் செய்த செயல் அனைவரையும் உருக வைத்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 3,000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தேசிய புத்தாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் பெண் செவிலியர் ஷான் சியா, நோய் மற்றவர்களுக்கு தொற்றுவதை தவிர்ப்பதற்காகவும்,

மருத்துவ பா துகாப்பு ஆடைகளை அணிந்துகொள்வதற்கான நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் தலையை மொட்டையடித்துள்ளது அனைவரையும் உருகவைத்துள்ளது.

எனது நேரத்தை அதிக உயிர்களை கா ப்பாற்ற பயன்படுத்த வேண்டும் இளம் பெண் செவிலியர் ஷான் சியா தெரிவித்துள்ளார்.