மீண்டும் உருவாக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் : விஞ்ஞானிகளால் அதிரடி திருப்பம்!!

490

புதிய கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள், சீனாவுக்கு அடுத்தபடியாக புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இது வைரஸை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்த கண்டுபிடிப்பு உலக சுகாதார அமைப்புடன் பகிரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரி கடந்த வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் மூலம் வைரஸின் நகலை வளர்க்க முடிந்தது என அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்துள்ளனர்.

இது போன்ற ஒரு சம்பவத்திற்கு நாங்கள் பல, பல ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளோம், அதனால்தான் எங்களால் இவ்வளவு விரைவாக உருவாக்க முடிந்தது என்று தொற்று மற்றும் நோய் எ திர்ப்பு சக்திக்கான பீட்டர் டோஹெர்டி நிறுவனத்தின் டாக்டர் மைக் காட்டன் கூறினார்.

டாக்டர்கள் இந்த நகலை சோதனைக்கு கட்டுப்பாட்டுப் பொருளாக பயன்படுத்தலாம் என்றும், நோயறிதலுக்கான மாற்றாக இருக்கும் என்றும் கூறினார். நோய் அறிகுறிகளைக் காட்டாத நபர்களிடம் வைரஸைக் கண்டறியக்கூடிய ஆரம்ப-நோயறிதல் பரிசோதனையை இது உள்ளடக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆன்டிபாடி சோதனை சந்தேகத்திற்குரிய நோயாளிகளை மறுபரிசீலனை செய்ய உதவும், வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது, அதன் விளைவு, மற்ற விஷயங்கள் ஆகியவற்றை நாம் இன்னும் துல்லியமாக சேகரிக்க முடியும் என டாக்டர் காட்டன் கூறினார்.

மேலும், இந்த கொரோனா வைரஸ் நகலின் மூலம் சோதனை தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் போல மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும் போது பரவ முடியும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த வைரஸை மீண்டும் உருவாக்கி அதன் மரபணுவை பகிர்ந்துள்ளனர். கொரோனா வைரஸால் சீனாவில் 132 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும் பதிவாகவில்லை.