சீனாவிலிருந்து இலங்கை வரும் மாணவர்களுக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள்!!

437

இலங்கை வரும் மாணவர்களுக்காக

சீனாவில் இருந்து கொரோனாவைரஸ் காரணமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கண்காணிப்புக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் கையேற்கப்படும் மாணவர்கள் விசேட பா துகாப்பின் கீழ் தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்தநிலையில் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பில் வைக்கப்படும் அவர்களில் எவருக்காவது கொரோனாவைரஸ் தொற்று காணப்படுமானால் அவர்கள் உடனடியாக தொற்று நோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.