கௌரவிப்பு
இலங்கையிலிருந்து சென்று பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற மூன்று வீரர்கள் இன்று (31.01.2020) வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் கௌரவிக்கப்பட்டனர்.
வவுனியா விபுலானந்தா கல்லாரியின் அதிபர் பி.சிவநாதன் தலைமையில், எஸ்.சஞ்சயன் (தங்கப்பதக்கம்), பி.ராகுல் (தங்கப்பதக்கம்), ரி.நாகராஜா (வெள்ளிப்பதக்கம்) வென்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கல்லூரி வளாகத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளரும், வடக்குமாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமார், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் கெ.யூட் பரதமாறன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.