2014ஆண்டின் முதலாவது பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடுகிறது.
கொள்கை ஆய்வு நிறுவனம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளதோடு மோட்டார் வாகன ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் நாளை இடம்பெற உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 23ம் திகதி நடைபெற உள்ளதோடு வெள்ளியன்று முன்னாள் எம்.பி. பெஸ்குவல் மீதான அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது.





