பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!!

321

MURUKANஇந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவர் மற்றும் வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் மரண தண்டனையை டெல்லி உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டவர்களின் கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால் இவர்களது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.