வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவி!!

696

பாடசாலை மாணவி

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரசபை மைதானத்தில் நின்ற பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பின் போது வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவியொருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக குறித்த மாணவியை மாவட்ட செயலக ஊழியர்கள் நோயாளி காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.