வவுனியா நகரசபை தலைவரின் வாகனத்தினால் ஏற்பட்ட பதற்றம் : மூடப்பட்ட வாயில்!!

665

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் நகரசபை வாளாகத்தினுள் நுழைய முற்பட்ட நகரசபை தலைவரின் வாகனத்தினால் நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் காரணமாக நகரசபையின் பிரதான வாயில் மூடப்பட்டது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக இன்று காலை 6.30 மணி தொடக்கம் நகரசபை இரு பிரதான வாயிலிலும் பொலிஸார் கடமைக்கு நியமிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் மாத்திரமே நகரசபை வாளாகத்தினுள் செல்ல அனுமதி வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை 7.15 மணியளவில் வாகனமொன்று நகரசபைக்குள் செல்ல முயன்ற போது வாயிலில் பா துகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் குறித்த வாகனத்தினை மறித்து நீங்கள் யார் என வினாவியுள்ளனர்.

அதற்கு வாகனத்தில் இருந்த பிரமுகர் தான் நகரசபை தலைவர் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிஸார் வாகனத்தினை உட்செல்ல அனுமதித்தனர். இதன் போது நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் சில கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன.

நகரசபை வளாகத்தினுள் சென்ற நகரசபை தலைவர் இ.கௌதமன் குறித்த வாயிலை மூடுமாறு நகரசபை பா துகாப்பு ஊழியருக்கு உத்தரவு பிறப்பித்து பூட்டினால் வாயிலை மூடினார். இதன் காரணமாக குறித்த வாயிலுடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

குறித்த வாயிலுக்கு வருகை தந்திருந்த மாணவர்கள் , இராணுவத் தளபதி, மாவட்ட செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் ஏமாற்றதுடன் திரும்பி நகரசபையின் மற்றைய வாயிலூடாக சுதந்திர தின நிகழ்வுக்கு சென்றனர்.

மூடப்பட்ட குறித்த வாயில் சுமார் 30 நிமிடங்களின் பின்னர் திறக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்விற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.