வவுனியாவில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆறு சிறைக் கைதிகள் விடுதலை!!

563

சிறைக் கைதிகள்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறைச்சாலையிலிருந்து ஆறு சிறைக் கைதிகள் இன்று (04.02.2020) காலை 10 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு கு ற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.