வவனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சுதந்திர தின நிகழ்வுகள்!!

534

சுதந்திர தின நிகழ்வுகள்

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று (04.02.2020) காலை 10.30 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக தர்மபால செனவிரட்ன தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட தமிழ் பிரிவிற்கான அமைப்பாளர் பிரேம் , பிரதேச இணைப்பாளர்கள் , கட்சியின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.