வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்த தாய் மரணம் : மகன் வைத்தியசாலையில்!!

779

விபத்தில்..

வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற பட்டா – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (05.02.2020) மதியம் 2 மணியளவில் பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் (வயது 07) மற்றும் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் 36 வயதுடைய (படுகாயமடைந்த மாணவனின் தாயார்) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்ட படுகாயமடைந்த மாணவனின் தாயார் சிகிச்சை பலனின்றி மாலை 3.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 36வயதுடைய சசிகுமார் புஸ்பராணி என்பரே உயிரிழந்த நபராவர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.