ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை பிரஜை ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 வயதான ரவீந்திரன் கிருஷ்ணபிள்ளை என்ற இலங்கை இளைஞனுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்டு கொலை செய்த காரணத்தினால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஸ்ட ஈடாக பணம் செலுத்த அதிகாரிகள் முயற்சித்தபோதும் அக்குடும்பத்தினர் மரண தண்டனையையே வலியுறுத்தியுள்ளனர்.