வவுனியா போக்குவரத்து பொலிசாரின் அதிரடி : 48 சாரதிகளிற்கு எதிராக நடவடிக்கை!!

645

போக்குவரத்து பொலிசாரின்..

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் மாலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை இரு‌ மணித்தியாலயமாக வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர்‌ பகுதியில் திடீர் சோ தனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவ் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இவ் விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 44 சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றிவாகனமோட்டியமை , குடிபோ தையில் வாகனம் ஓட்டிய மை,

வாகனமோட்டும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காக சாரதிகளுக்கு எ திராக தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தா க்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.