போட்டியின் போது உ யிரிழந்த சகோதரி : வே தனை செய்தியுடன் உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர்!!

587


அணித்தலைவர்



19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின்போது, சகோதரி உ யிரிழந்த சோ கத்துடனே வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.



சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி, இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.




ஆனால் இந்த தொடரின் போது, அக்பர் அலி தனது சகோதரியை இ ழந்து அந்த வே தனையுடனே விளையாடியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.


டாக்காவில் உள்ள ஒரு உள்ளூர் வலைத்தளம் ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்ட செய்தியில், நான்கு சகோதரர்களுடன் கடைசியாக பிறந்த அவருடைய சகோதரி இரட்டை குழந்தை பெற்றெடுத்தபோது உ யிரிழந்துள்ளார்.

க வனம் சி தறிவிடுமோ என்கிற அ ச்சத்தில் இந்த செய்தியை அவருடைய குடும்பத்தினர், அக்பர் அலிக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார்.


ஆனால் பாகிஸ்தான் உடனான போட்டி மழையால் ரத்து செய்யபட்டிருந்தபோது, அவர் எப்படியோ இந்த செய்தியை தெரிந்துகொண்டு, வீட்டிற்கு போன் செய்து பேசியுள்ளார். அந்த வ ருத்தத்தை சக வீரர்களிடம் கூட தெரிவிக்காமல் வே தனையுடனே விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.