பெண் ஒருவரின் ச டலம்..

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் அடையாளந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் ச டலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்மடு கடற்கரை பகுதி மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய 50 மற்றும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயோதிப பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் ச டலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுங்கி இருக்கலாம் என்றும், சடலத்தை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் தெவித்துள்ளார்.

இதேவேளை, உ யிரிழந்தவரின் ச டலத்தினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





