திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 500 சிறுவர்கள் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 18000 சிறுவர்கள் வரை கை மற்றும் கால்கள் முறிவடையும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதாக அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திடீர் அனர்த்தங்கள் தொடர்பில் முற்கூட்டிய அவதானம் இன்மையே இவற்றிற்கான காரணம் என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இவ் அனர்த்தங்களின்போது நால்கில் மூன்றிற்கு அதிகமானவை தவிர்த்துக் கொள்ளக் கூடிய அனர்தங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.