வவுனியாவில் த ற்கொ லைகளைத் தடுக்க கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு உதயம்!!

643

கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு உதயம்

வடக்கில் யு த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் த ற்கொ லைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் த ற்கொ லைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ம ன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை முடிவு எடுப்பவர்களை கா ப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது ம ன அ ழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக

எவ்வித ஊதியமும் இன்றி அவர்களுக்காக சேவையாற்ற தயராகவுள்ள கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்களுக்கான பயிற்சி பாசாறை வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலய மண்டபத்தில் இன்று (15.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

இதன் போது தொண்டர் ஊழியர்களுக்கு த ற்கொ லைகள் ஏன் இடம்பெறுகின்ற அதற்காக தீர்வினை எவ்வாறு வழங்குவது, அவர்களுடன் எவ்வாறு அனுகுவது தொடர்பாக சமூக ஆர்வலர் நித்தியானந்தன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.