திருடப்போன வீட்டில் வேறு ஒரு பொருளை கண்டதும் அங்கேயே தங்கிய திருடன் : விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி!!

403

திருடப்போன வீட்டில்..

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸிடம் சி க்கியுள்ளார்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கு திருட சென்ற திருடன் ஒருவன், அங்கேயே தூங்கியதால் மறுநாள் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில், உள்ள அடுக்குமாடிக் குடியிருந்த நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். தனது சில பொருட்களை மட்டும் அங்கே வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து, பொலிசாரிடம் புகார் தெரிவிக்க திருடனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர், மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் என்பதும் திருடுவதற்காக சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக ம துபானங்களைப் பார்த்து ம யங்கி அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் போ தையில் ம யங்கி அந்த வீட்டிலேயே தூங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.