லொறிக்கு நேர்ந்த கதி
யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த லொறி ஒன்று புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்