விபத்தில் உயிரிழந்த நாய் : வயிற்றை மருத்துவர் கிழித்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!!

671


விபத்தில் உயிரிழந்த நாய்..



தமிழகத்தில் உ யிரிழந்த நாயின் வயிற்றில் இருந்து ஐந்து நாய் குட்டிகள் உ யிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் அதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.



இதில் காயமடைந்த அந்த பெண் நாய் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போ ராடியது. அப்போது அங்கு வந்த தண்டபாணி என்பவர் நாயை தூக்கி கொண்டு அருகிலிருந்து கால்நடை மருத்துவமனைக்கு விரைந்தார்.




அங்கிருந்த மருத்துவர் ரவிசங்கர் உ யிருக்கு போ ராடிய நாய்க்கு சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அது உ யிரிழந்தது. அப்போது தான் நாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரவிசங்கர் உடனடியாக அதன் வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்தார்.


இதையடுத்து உள்ளிருந்து 5 குட்டிகளை உயிருடன் எடுத்தார். இது குறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், நாய் ப லியான ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருந்த குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

ஆனால் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை மூலம் குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. தற்போது நாய்க்குட்டிகள் நலமாக இருக்கின்றன என ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளார்.