நியூசிலாந்தில் இறந்த நாயின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்த உரிமையாளர்!!

242

நாயின் அஸ்தியை..

நியூசிலாந்தில் இ றந்த நாயின் அஸ்தியை, அதன் உரிமையாளர் இந்தியாவில் உள்ள கங்கை நதியில் கரைத்து இறுதிச்சடங்கை நடத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.

இவர் 10 ஆண்டுகளாக தன்னுடன் லைக்கான் என்கிற நாயினை பாசமாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய செல்லப்பிராணி இ றந்ததும், இந்து பாரம்பரியத்தின் படி தகனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி லைக்கானின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து கங்கை நதியில் கரைத்து இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளார்.