வெளிநாட்டு பெண்ணொருவரை ஏமாற்றி 300 இலட்சம் ரூபாய் நிதி மோ சடி!!

502

நிதி மோ சடி

திருகோணமலையில் வெளிநாட்டு பெண்ணொருவரை ஏமாற்றி 300 இலட்சம் ரூபாய் மோ சடி செய்த கு ற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை கொழும்பு குற்ற வி சாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது காலி – கல்பே பகுதியைச் சேர்ந்த சமீர சம்பத் என்ற 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டு பெண் ஒருவருடன் தொடர்புகளை பேணி திருகோணமலை, நிலாவெளி பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணியொன்றை பெற்று உணவகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும்,

அதன் பின்னர் வெளிநாட்டு பெண்ணை அதில் இருந்து வெளியேற்றி அவருடைய 300 இலட்சம் ரூபாய் பணத்தை மோ சடி செய்ததாகவும் சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு கு ற்ற வி சாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சந்தேகநபர் பல தடவைகள் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு நிலாவெளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உணவகம் அமைக்கப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமான (உல்லாசப் பிரயாண சபைக்கு) இடமெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கு ற்ற வி சாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.