மஹா சிவராத்திரி விழா

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன் போது நேற்று காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள், பூஜைகள், பல்வேறு சொற்பொழிவுகள் மற்றும் மதம் சார் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து இரவு பூசையும் இடம் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல இலட்சக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






