வ/புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!

456

வ/புதுக்குளம் மகாவித்தியாலயத்தில்  கடந்த 18.02.2020 (செவ்வாய்கிழமை)அன்று   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு.ச. சுபாஸ்கரன்  தலைமையில் இடம்பெற்ற  விளையாட்டு போட்டியில் கடற்தொழில் மற்றும்நீரியல் வள மூலங்கள் அமைச்சர்கெளரவ .டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட துடன்  புதிதாக  அமைக்கபட்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களையும் திறந்து வைத்ததுடன்  வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை,தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேற்படி நிகழ்வில்  வவுனியா  வடக்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி.அ.சுரேந்திரன் சிறப்பு விருந்தினராவும் கலந்து கொண்டதுடன்  ஈழமக்கள் ஜனநாயக கட்ட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்  ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். .