தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாப்பிள்ளை செய்த செயல் : திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

372

மணப்பெண்..

இந்தியாவில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று கூறு நிறுத்திய சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

இதனால் திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெற்றது. அடுத்த நாள் காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகி மணமேடையில் நின்றனர்.

அப்போது மணமகனின் தங்கை உற்சாகமாக பாடல் ஒன்றிற்கு நடனமாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மணமகன் கோபத்தின் உச்சிக்கு சென்று, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தங்கையை அடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண், இவரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறி மணமேடையிலேயே மாலையை உதறிவிட்டு எழுந்து சென்றுள்ளார்.

அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அவரோ ஒரு கோபக்காரருடன் தன்னால் வாழ முடியாது. சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை தன்னிடமும் இதேபோல்தான் நடந்துகொள்வார்.

பெண்களை மதிக்காத இதுபோன்ற நபரால் தன்னால் வாழ முடியாது என தெரிவித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின்போது மணமகன் கு டிபோ தையில் இருந்ததாக கூறப்படுகிறது.