கேஸ் கசிவினால் 20-25 பேர் வைத்தியசாலையில்!!

278

Hospitalஹோமாகம – கடுவான பிரதேசத்திற்கு அருகில் கடலுணவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கேஸ் கசிவினால் 20-25 பேர் வரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற நோய்களே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் ஆபத்தான நிலையில் எவரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.