இலங்கைத் தமிழரின் கதை..

யு த்த காலத்தில் நான் இலங்கையில் வாழ்ந்த நாட்கள்தான் எனது வேலையை சிறப்பான முறையில் செய்யும் வகையை தீர்மானித்தன என்கிறார் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவர்.

இலங்கையில் யு த்தம் நடைபெறும் காலகட்டத்தில் இலங்கையில் வளர்ந்தவர் அருண் தெய்வேந்திரராஜா. 1992 இல் அவருக்கு 12 வயது இருக்கும்போது, அவரது குடும்பம் யு த்தத்திற்குத் தப்பி கனடாவுக்குச் சென்று குடியேறியது.

இலங்கையிலிருந்த சூழ்நிலையால், ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் மகனாக இருந்தும் தெய்வேந்திரராஜாவால் கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன் கடைசி ஓராண்டு பள்ளிக்கு செல்ல இயலவில்லை.

யு த்தம் நடைபெறும் ஓரிடத்தில் வாழும்போது, ஒவ்வொரு நாளும் உ யிர் பிழைத்திருப்பதற்கே அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும் என்று கூறும் தெய்வேந்திரராஜா, அங்கேயே இருந்திருந்தால் வாழ்க்கையில் ஒன்றையும் சாதித்திருக்கமுடியாது என்கிறார்.

ஒன்ராறியோ பல்கலைக்கழகம் ஒன்றில் கணினிப் பொறியியல் பயின்றார் தெய்வேந்திரராஜா. அமெரிக்கா சென்று பல வேலைகளைச் செய்த அவர், யு த்த காலத்தில் தான் இலங்கையில் வாழ்ந்த நாட்கள்தான் தனது வேலையை சிறப்பான முறையில் செய்யும் வகையை தீர்மானித்தன என்கிறார்.

எப்படி நேர்மறையாக சிந்திப்பது, எப்படி வாடிக்கையாளர்களை பரிவுடன் அணுகுவது போன்ற விடயங்களுடன், ஒருபோதும் மனம் தளராமல் போ ராடுவது எப்படி என்பதையும் அந்த நாட்கள்தான் வடிவமைத்தன என்கிறார்.

மனம் சோர்ந்து எடுத்த முயற்சியைக் கைவிடவே கூடாது, கடைசி மூச்சு உள்ளவரை போ ராடவேண்டும் என்று கூறும் தெய்வேந்திரராஜா, அதனால்தான் புதிய வேலைகளை துவக்குவது எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார்.

அது எப்போதுமே ஒரு போ ராட்டம்தான் என்று கூறும் அவர், ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது என்கிறார். தற்போது அமெரிக்காவின் Seattleஐ மையமாகக் கொண்ட Usermind நிறுவனத்தில் vice president of product என்ற பெரும் பொறுப்பை வகிக்கிறார் தெய்வேந்திரராஜா.

தன்னுடன் பணியாற்றுபவர்களை விரட்டி வேலை வாங்காமல், தான் ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்கள் தன்னை பின்பற்றும்படி செய்கிறார் அவர்.

என்னைப் போலல்லாமல் வெவ்வேறு வித பின்னணியிலிருந்து வந்தவர்களிடம் போய், போ ராடுங்கள் என்று கூறமுடியாதே என்று கூறும் தெய்வேந்திரராஜா, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துவது எது என்பதைக் கண்டறிந்து அதன்மூலம் அவர்களை பணியை மனதார செய்ய வைக்க முயல்கிறார்.




