கொரோனா வேகமாக பரவி வருகின்றது : உலகின் ஒவ்வொரு நாட்டையும் தாக்கும் அபாயம்!!

648

கொரோனா வைரஸ்..

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டையும் சென்றைடையக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகவும், இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், உலக சுகாதர அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் இப்போது கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து ஐரோப்பிய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிகமாகவும் பரவி வருகிறது.

இதனால் ஒவ்வொரு கண்டங்களிலும் இருக்கும் நாடுகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கோவிட் -19 நோயின் பரவல் அதிகமாகி வருகிறது, இது அனைத்து நாடுகளையும் அடையக் கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும், உலக சுகாதர அமைப்பின் தலைவரான Tedros Adhanom Ghebreyesus, இந்த வைரஸ் ஒரு தொற்று நோயை கொண்டுள்ளது, உலக நாடுகள் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கின்றன.

நாங்கள் உண்மையில் மிகவும் நுட்பமான சூழ்நிலையில் இருக்கிறோம், அதில் பாதிப்பு எந்த திசையிலும் நாம் அதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை குறைந்தது 53 நாடுகளில் 83,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் இப்போது வேகமாக பரவுகிறது, இது இப்போது பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு இத்தாலியில் பல உ யிர்களை வாங்கியுள்ளது. இதன் காரணமாக அரசாங்கங்கள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.