பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய ஆறு பேர் கைது!!

274

Arrestedபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமை முடிந்து வீடு திரும்பிய போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.