சிறுவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஜனாதிபதி : மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு!!

589

ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறுவர்கள் குழுவினருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அதனை மகிழ்ச்சியுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று கண்டி தலதா மாளிகைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி வீதியில் சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்ட ஜனாதிபதி,

“இந்த நாட்டு பெற்றோர், எதிர்கால சந்ததி மற்றும் இளைஞர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.