விஷ்வரூபம் எடுக்கும் கொரோனா : அதிகரிக்கும் மரணங்கள்!!

528

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று வரை 3000 பேர் மரணித்துள்ளனர். இதில் 90 வீதமான மரணங்கள் சீனாவின் ஹுபை மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன.

ஈரானில் 50 மரணங்களும் இத்தாலியில் 30 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இதனை தவிர 10 நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளன. சர்வதேச ரீதியாக, 90, 000 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை சீனாவை காட்டிலும் வேகமாக ஏனைய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

உலக சுகாதார மையத்தின் நேற்றைய தகவல்படி கொரோனா தொற்று காரணமாக 2-5 வீத மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 4000 பேரும் பிரித்தானியாவில் 36பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.