காதலித்து கரம்பிடித்த கணவரை குழந்தைகளுடன் வீதி வீதியாக தேடி அலையும் மனைவி!!

516

கணவரை தேடி..

கைவிட்டு சென்ற காதல் கணவரை, தனது இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவமானது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா (30) என்பவர் மா மில் ஒன்றில் வேலை பார்த்த போது, மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் லிங்கேஷ்வரன் என்ற ஆண் குழந்தையும், 2 வயதில் தன மீனாட்சி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாதியை காரணம் காட்டி, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு த லைமறைவாகியிருக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பபிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷை கண்டுபிடித்து பொலிஸார் சேர்த்து வைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுரேஷ் மா யமானதை அடுத்து, பபிதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மதுரை வீதிகளில் கணவரை தேடி அலைந்து வருகிறார்.

இந்த நிலையில் உடமைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டும், மகனை ஒரு கயிற்றால் முந்தானையில் முடிந்து கொண்டும் சாலையில் நடந்து சென்ற போது ம யங்கி வி ழுந்துள்ளார். இதனை பார்த்ததும் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.