நிலத்தின் ஒரு பகுதியில் வீசிய கடுமையான துர்நாற்றம் : அந்த இடத்தை தோண்டிய போது காத்திருந்த அ திர்ச்சி!!

699

கடுமையான துர்நாற்றம்..

தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் பு தைக்கப்பட்ட யானையின் ச டலம் தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குடியாத்தம் அருகில் மத்தேட்டிப்பள்ளி என்னுமிடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியார் இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் யானைகள் பயிர்களை அழிப்பது தொடர்கதையாக இருந்துள்ளது. இதைத் தடுக்க பிச்சாண்டி தன் நிலத்தை சுற்றிலும் வன விலங்குகள் புகாவண்ணம் ச ட்டவி ரோதமாக மின் வேலி அமைத்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை பிச்சாண்டியின் குத்தகை நிலத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இ றந்துள்ளது.

அதிகாலை அங்கு வந்த பிச்சாண்டி வனத்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என ப யந்துள்ளார். இதையடுத்து அசோக் குமார் என்பவரின் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நிலத்தில் ராட்சத பள்ளம் தோண்டினார். பின்னர் மின்சாரம் பாய்ந்து இறந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழிக்குள் தள்ளி புதைத்துள்ளார்.

இதை தொடர்ந்து யானை பி ரச்சனையில் இருந்து த ப்பியதாக எண்ணி நிம்மடையடைந்தார் பிச்சாண்டி. ஆனால் இது குறித்த தகவல் அரசல்புரசலாக பரவிய நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் காதுக்கு இது போனது.

பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்து வந்த விசாரித்தனர். அப்போது பிச்சாண்டி நிலத்தில் ஒரு பகுதியில் புதிதாக மண் தோண்டி மூடப்பட்டது தெரியவந்தது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது. அங்கு யானை பு தைக்கப்பட்டதை பார்த்து அனைவரும் அ திர்ச்சியடைந்தனர்.

யானையின் ச டலம் வெளியில் எடுக்கப்பட்டு பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டு தடயங்களை சேகரித்த பின் பள்ளத்தில் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே தப் பியோடிய பிச்சாண்டியை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.