இலங்கையர்களுடன் கை குலுக்க அ ச்சப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!!

613

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், ஒருவருடன் ஒருவர் கை குலுக்குவதை தவிர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் தொடர்புகளை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளளது.

இலங்கையை நோக்கி வருவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், விசேட போட்டிகளின் போது வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் எதிரணி அணியின் வீரர்களை லேசான தொடுதலுடன் வாழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.